11/11/13

காதலின் தண்டனை....

காதலின் தண்டனை இறைவனின் தண்டனை உன்னை காதலித்தது காதலின் தண்டனை உன்னை நான் பிரிந்தது....! காதலின் மறைவிடம் கனவுதான் -அதில் கூட வரமறுக்கிறாய்...! நீ தந்த ரோஜாவில் ஒவ்வொரு முள்ளும் ரோஜாவால் வரவில்லைஉன்னால் வந்தது......

28/10/13

தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில்

தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர்  நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது....

23/10/13

வித்தியாச நடனம் நிகழ்வில் பார்வையாளர்களை கவர்ந்த "

  கனடியத் தமிழர் மத்தியில் நடத்தப்படும் நிகழ்வு எதுவாயினும் இசை , நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமையான ஒன்று தான். இதுவரை நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலுமே நம் பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்திற்கும் , தமிழ் திரையுலகப் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த முறையைத் தவிர்த்து முழுமையான வர்த்தகத் திருவிழாவாக க்டந்த ஆண்டு நடைபெற்ற " Taste Of Online marketing " நிகழ்வில் இணைய சந்தைப்படுத்துதல் குறித்து...

18/10/13

கடைக்கு சிசுவின் சடலத்துடன் வந்த இளம்பெண்

அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த பையிலிருந்து துர்நாற்றம் வரவே, பொலிசார் சோதனையிட்டுள்ளனர். அப்போது,...

3/10/13

நாம்உண்ணும்உணவால் உண்டாகும் உடல் மாற்றம்

   உணவு 35 வயதாகும் உங்களைப் பார்த்து யாராவது ‘உங்களுக்கென்ன 40 வயசிருக்குமா’ எனக் கேட்டால் எப்படிப் பதறிப் போவீர்கள்? உண்மையான வயதை நிரூபிக்க எப்படியெல்லாம் தவிப்பீர்கள்? ‘என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே…’ என எத்தனை நாள்கள் தூக்கமின்றி மாய்ந்து போவீர்கள்? அதே நியாயம்தானே உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும்..? 8 வயதுப் பெண்குழந்தை 12 வயதுக்கான வளர்ச்சியுடன் நின்றால்? 10 வயது ஆண் குழந்தை, பூனைமுடி மீசையுடன் நெடுநெடுவென உயர்ந்து...

28/9/13

கதிர்காம தேவாலயத்துக்கு பூட்டு 2 ஆம் திகதி வரை

கதிர்காம தேவாலயம் நாளை பகல் பூஜையின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. இதனை கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையில் விகாராதிபதி மற்றும் ஊவா வெல்லச பீடாதிபதி கலாநிதி அளுத்வெவ சோரத நாயக்க தேரர் காலமானதை அடுத்தே தேவாலயம் மூடப்படவுள்ளத...

20/9/13

மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்

எந்நாளும் மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்  தோல்வியை மட்டும் வெல்லவேண்டுமென்று நினையுங்கள்...

16/9/13

நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

  மத்தியகிழக்கில் தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர். சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும்...

10/9/13

இவ்வளவு தூசியும் கண்ணுக்குள் ?

ஒரு மனுஷனுக்கு கண்ணுக்குள்ள இவ்வளவு தூசியும், அழுக்கும் இருக்குமா ? அதை நாம் நம்ப முடியாத முறையில் வெளியே எடுக்கும் இந்த பாட்டியின் திறமை அபாரம் ஆனா பாட்டி எந்த ஊருன்னு தான் தெரியவில்லை! ஊருன்னு தான் தெரியவில்லை...

9/9/13

பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் 10பேர்

தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது: கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாலமானது, தேயிலை மடுவத்தை அண்மித்து உள்ளமையினால், அதில் வரிசையாக சென்றே சம்பள நிலுவை, தேயிலை தூள் என்பவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள...

3/9/13

அதிமுகவில் இணைந்த பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி

பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர். நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். நாட்டுப்புறப்...

29/8/13

காளி கோயிலில் மிருக பலிக்கு தடை!- நீதிமன்றம்??

இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது. தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான...

28/8/13

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும் சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது. சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது...

23/8/13

இலவச அழைப்புக்களை பேஸ்புக் மூலமாக மேற்கொள்வதற்கு

முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன்...

21/8/13

கன்னித்தன்மை மாணவிகளுக்கு பரிசோதனை: எதிர்ப்பு

இந்தோனேஷியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள்...

20/8/13

மேலோங்கும் உடல் உறுப்பு ஊழல் ஜேர்மனில் !!

ஜேர்மன் நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் ஊழலானது மேலோங்கி காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.ஜேர்மனில் உள்ள கோட்டிங்கன்(Göttingen) பல்கலைக்கழக மருத்துவமனையில் இதுவரை 11 உடல் உறுப்பு ஊழலானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையின் அனிமேன்(Aiman O) என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தவறான உடல் உறுப்பு பாகங்களை வைத்து அறுவை சிகிச்சை செய்த குற்றத்திற்கு ஆளாகியுள்ளார். இதுவரை தானம் செய்யப்பட்ட கல்லீரலை உறுப்புகள் பொருந்தாத...

18/8/13

இப்படியும் ஒரு கொடூரமா? கடைக்கு சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்

தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்கு சென்ற மனைவியை, கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானின் சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த கொடைடாட் என்பவருக்கு மனவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று கணவர் கொடைடாட்டுக்கு சொல்லாமல் கடைக்கு சென்றுள்ளார் அவரது மனைவி. இவர் வெளியில் சென்றுள்ளதை கொடைடாட்டின் நணபர்கள் பார்த்து தெரிவித்து விட்டனர். உடனடியாக வீடுக்கு வந்த கொடைடாட், ஆத்திரம் தாங்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்...

17/8/13

யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி!

 யாழ்.ஏ-9 வீதி நாவற்குழிப் பகுதியில் இன்று காலை வேக்கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் வீதியினை விட்டு விலகி தடம் புரண்டடுள்ளது. மேற்படிச் விபத்துச் சம்பவத்திற்கு உள்ளான பிக்கப் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளபோதும் பிக்கப் வானத்தினை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் நாவற்குழிப் பாலத்தின் வழுக்கும் தன்மை காரணமாக நிலைதடுமாறி...

15/8/13

பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில்

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­ல­கப்­ பி­ரிவில் வினா­சி­யோடை கிரா­மத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் பலாத்­கா­ரத்­திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக...

14/8/13

இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரியப் பிரசை??

கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெற்றுள்ளீர்கள் எனக்கூறி பலரிடம்  இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந் நைஜீரியப் பிரசை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரைத் திருமணம் முடித்து வசித்து வந்த நிலையில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசாரணையின்...

9/8/13

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்**

இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்...

5/8/13

வெள்ளப்பெருக்கு: முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 24 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில்...

29/7/13

தந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு - பெல்மதுளை சம்பவம்

பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தில் 65 வயதுடைய ஒருவர் தீயில் எரிந்து இறந்தமை சம்பந்தமாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. ஜே. சிங்கோ (வயது 65) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சனிக்கிழமை தீ மூட்டி எரிந்து இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ தினத்தன்று வாடகைக்கு...

18/7/13

பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

26 மாத குழந்தை ஒன்றை கொலை செய்ததாக டொரண்டோவில் குழந்தையின் தாயாரும் அவருடைய வாழ்க்கைத்துணைவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.Marleny Cruz என்ற 25 வயது பெண்ணும், Joel France என்ற 36 வயது ஆண் ஒருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் Marleny Cruz அவர்களின் 26 மாத குழந்தையும் இருந்தது. அந்த குழந்தைக்கு Joel France தந்தை அல்ல. இருவரும் குழந்தையை சரியாக கவனிக்காமல் அவரவர் வேலையை மட்டும் செய்து வந்துள்ளனர். திடீரென...

5/7/13

நீரோடையில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் பலி

கண்டியிலிருந்து கெக்கிரவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, தம்புள்ளைப் பிரதேசத்தின் நீரோடை ஒன்றில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வி காயமடைந்துமுள்ளார். கெகிராவ ரனஜயபுர பாதுகாப்புப் படை குடியேற்றப் பகுதியில் வசிக்கும் சுனந்த பிரேமதிலக என்ற 35 வயதுடைய கடற்படை அதிகாரியே விபத்தில் மரணித்துள்ளார். தம்புள்ள பன்னம்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த புதல்வி, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

4/7/13

காமலீலை புரிந்த அல்கொய்தா தலைவர்

 யேமனில் கொல்லப்பட்ட அல் கொய்தா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய சென்றபோது ஆயிரக்கணக்கான டொலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம்...

3/7/13

இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு

பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தால் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு மேற்படிப்பை தொடருவதற்கு உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தலா ஒரு மாணவிக்கு ரூபா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உயர்தரத்திற்கு தேவையாக புத்தகங்கள் அடங்கிய பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த  நிகழ்விற்கு வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி தேவராணி நவரத்தினம் அவர்கள்...

வாயைப் பிளக்க வைத்த ஸ்மார்ட் கை கடிகாரம்

  அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன. எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர்  தயாரித்துள்ளனர். குறித்த ஸ்மார்ட் கடிகாரம் 'அண்ட்ரோய்ட்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம்...

26/6/13

மெதுவாக சாலையை கடந்தவருக்கு அபராதம்:??

அவுஸ்திரேலியாவில் மெதுவாக சாலையை கடந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஜேம்ஸ் கிளாசென்(வயது 33) என்பவர், கடந்தாண்டு மார்ச் மாதம் அடிலெய்டு வந்தார். அங்குள்ள சாலையை மெதுவாக கடந்ததாக பொலிசார் ஜேம்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று அடிலெய்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்கை பதிவு செய்ததற்காக பொலிசாரை கண்டித்த நீதிபதி, இவர் என்ன தவறு செய்து...

16/6/13

மணிவண்ணன் மரணம்

திரையுலகம் அதிர்ச்சி! இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப்...

15/6/13

மணிவண்ணன் மரணம்: நாம் தமிழர் அஞ்சலி

பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50வது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏவை இயக்கிய இயக்குனர் மணிவண்ணன் இன்று இயற்கை எய்தினார்.  தமிழ்சினிமாவின் தலைசிறந்த ஒரு கோபுரம் சாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அதுமிகையாது. ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைப்படங்கள் இயக்க வருபவர்களுக்கும் என்றும் சாயாத கலங்கரைவிளக்கக் கோபுரங்களாத்...

10/6/13

செக்ஸ் தொழிலாளியின் மகளுக்கு கிடைத்த அதிர் ஷ்டம்

மும்பையை சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்தவர் ஸ்வேதா(வயது 18). இவரின் தாத்தா பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார். இதில் விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார். எனினும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் குழந்தையை பெற்றெடுத்து நல்ல முறையில்...

3/6/13

யார்மனதையும் புண் படுத்துவதற்கு இல்லை

மிருகம் காட்டுக்குள்ளே மனிதத்தன்மையுடன் மனிதன் நாட்டுக்குள்ளேமிருகத்தன்மையுடன்விலங்குகள் விலங்குகளுக்கு குழிபறிப்பதில்லை மனிதன் மனிதனுக்கு குழிபறிக்கிறன் ,விலங்குகளே வழிவிடுங்கள் மனிதன் காட்டுக்குள்ளே வருகிறான்,{காணொளி} , ...

23/5/13

பூவின் மருத்துவ குணங்கள்:-

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர...

22/5/13

கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய

நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரை நிர்வாண நிலையில், மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது,குறித்த பெண்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்,.  குளியாப்பிட்டிய கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம் விதிக்கப்பட்டவர்களாவர்.  கடற்கரையிலிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடிய இந்தப் பெண்களை பொலிஸார்...

21/5/13

ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி

 கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது.கடந்த வியாழன் அன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒருவன் அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறான். வான்கூவரைச் சேர்ந்த பிராட் டீரிங் என்பவர் இந்தக் கொலைகாரனின் துப்பாக்கிக் குண்டுக்குப் கடந்தவாரம் பலியானார். காவல் பணியாளரைப் போல உடை உடுத்தி வியாழன் பிற்பகல் துப்பாக்கி ஏந்தியபடி சிலர்...

15/5/13

இரட்டை கொலை: பொலிசார் தேடுதல்

  சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார்.கொலை நடைபெற்றபொழுது அக்காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் எவருக்கும் இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. பெற்றோரோடு வாழ முடியாத சிறுவர்கள் இந்த இல்லத்தில் அன்போடு வளர்க்கப்படுகிறார்கள். இங்கு ஒரு குடும்பச் சூழ்நிலை நிலவுவதால்...

9/5/13

மருத்துவமனையில் உள்ள இம்ரான் கான் தேர்தலில்

 பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் பிரச்சாரத்தின் போது மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் இருந்தபடியே,...

7/5/13

விபத்தில் பலி எண்ணிக்கை 700 ஆக அதிகரிப்பு:

வங்க தேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த மாதம் 24ம் திகதி இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுமார் 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.இந்நிலையில், இன்றைய நிலவரப்படி விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து இதுவரை 700 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன....

4/5/13

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைந்தது,,

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 688 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2586-க்கு விற்கிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 135 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 45 ஆயிரத்து 690 ஆகவும், ஒரு கிராம் ரூ. 48.90 ஆகவும் உள்ள...

2/5/13

சிறிலங்காசெல்லும் ஜேர்மனிய சிங்கங்கள்,,,,

ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்காவுக்கு மூன்று சிங்கங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.இம்மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் இந்த சிங்கங்கள் சிறிலங்காவுக்கு தருவிக்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். ஜேர்மனியிலிருந்து இரண்டு பெண் சிங்கங்களும், தென் கொரியாவிலிருந்து ஆண் சிங்கமொன்றும் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 6 சிங்கங்கள்...

30/4/13

விண்வெளி சூரிய தகட்டில் விழுந்த ஓட்டை:?

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து கடந்த 1998ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.பூமியில் இருந்து சுமார் 370 கி.மீற்றர் தொலைவில் சுற்றுவட்டத்தில் சுற்றி வருகின்ற இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார். சமீபத்தில் விண்வெளி...

28/4/13

குரு பெயர்ச்சி பலன்கள்! 2013 – 2014

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 வைகாசி மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப இராசியில் இருந்து, மிதுன இராசிக்கு சஞ்சாரம் செய்ய போகிறார். மிதுனத்தில் இருந்து துலா இராசி, தனுசு இராசி, கும்ப இராசியை, 5-7-9-ம் பார்வையாக பார்க்க இருக்கிறார். ...இதனால், தற்போது துலாவில் இருக்கும் இரண்டு முக்கிய கிரகங்களான சனி மற்றும் இராகுவின் தீமைகளை சற்று குறைத்து, மக்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார். ஐ.டி. துறை, இரும்பு தொழில், வாசனை திரவியங்கள், ரியல் எஸ்டேட்,...

16/4/13

தென்கொரியா மீது தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்

வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.  இது, வட கொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. வட கொரியா அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோபத்தின் கனல் வெளிப்பட்டது. ”தென் கொரியாவில் உள்ள பொம்மலாட்ட...