29/7/13

தந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு - பெல்மதுளை சம்பவம்


பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தில் 65 வயதுடைய ஒருவர் தீயில் எரிந்து இறந்தமை சம்பந்தமாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. ஜே. சிங்கோ (வயது 65) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சனிக்கிழமை தீ மூட்டி எரிந்து இறந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ தினத்தன்று வாடகைக்கு தங்கியிருந்தவருக்கும் இறந்தவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டு இரும்பினால் வாடகைக்கு தங்கியிருந்தவரை இறந்தவரை தாக்கியுள்ளார்.

வாடகைக்கு தங்கியிருந்தவர் பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதற்கிடையில் தீ மூட்டி எரிந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக