3/7/13

இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு


பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தால் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு மேற்படிப்பை தொடருவதற்கு உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தலா ஒரு மாணவிக்கு ரூபா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உயர்தரத்திற்கு தேவையாக புத்தகங்கள் அடங்கிய பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த  நிகழ்விற்கு வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி தேவராணி நவரத்தினம் அவர்கள் தலைமை வகித்தார். இதில் பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம சுவாமி சித்துருபானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளான கா.கீர்த்தனா, மு.வெண்ணிலா, இ.சுரேகா, சி.கோகிலா, ச.டிலோஜி ஆகியோருக்கு அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக