15/5/13

இரட்டை கொலை: பொலிசார் தேடுதல்

  
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார்.
கொலை நடைபெற்றபொழுது அக்காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் எவருக்கும் இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பெற்றோரோடு வாழ முடியாத சிறுவர்கள் இந்த இல்லத்தில் அன்போடு வளர்க்கப்படுகிறார்கள். இங்கு ஒரு குடும்பச் சூழ்நிலை நிலவுவதால் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறார்கள்.
கொலைச் செய்தவரும் மிகவும் நாகரிகமாக மனிதர், குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்வார், தோட்டத்தில் அவர்களோடு உற்சாகமாக விளையாடுவார் என்று காப்பகத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைகளை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக