7/5/13

விபத்தில் பலி எண்ணிக்கை 700 ஆக அதிகரிப்பு:


வங்க தேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த மாதம் 24ம் திகதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுமார் 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து இதுவரை 700 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிக பிரேதங்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக