28/4/13

குரு பெயர்ச்சி பலன்கள்! 2013 – 2014

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 வைகாசி மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப இராசியில் இருந்து, மிதுன இராசிக்கு சஞ்சாரம் செய்ய போகிறார். மிதுனத்தில் இருந்து துலா இராசி, தனுசு இராசி, கும்ப இராசியை, 5-7-9-ம் பார்வையாக பார்க்க இருக்கிறார்.

...இதனால், தற்போது துலாவில் இருக்கும் இரண்டு முக்கிய கிரகங்களான சனி மற்றும் இராகுவின் தீமைகளை சற்று குறைத்து, மக்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார்.

ஐ.டி. துறை, இரும்பு தொழில், வாசனை திரவியங்கள், ரியல் எஸ்டேட், எழுது பொருள் தொழில், ஜவுளி துறை, கட்டட உபகரணங்கள் ஆகிய இவை அனைத்தும் லாபம் பெரும்.

அன்னிய நாடுகள் வீண் விவகாரத்திற்கு வந்தாலும் அடங்கி விடுவர்.

பெரும் மழை, இயற்கை சீற்றங்கள் வர வாய்ப்புள்ளது. அரசியல் ஈடுபாடு உடையவர்களுக்கு சற்று சிரமமான நேரம். பிரச்னைகளை சமாளிக்க பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மை, தீமைகளை கலந்தே செய்வார்.

குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 31.5.2013 அன்று வெள்ளிக்கிழமை, ரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுனத்திற்கு போகும் குரு, 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்களை தருவார் என்று பார்ப்போம்…

0 கருத்துகள்:

கருத்துரையிடுக