5/4/13

ஹிட்லர் உருவில் மெர்கெல்: ஜேர்மானியர் கொதிப்பு


ஐரோப்பாவில் திவாலான கிரேக்க நாடும், சைபரஸ் நாடும் தங்களது சிக்கன நடவடிக்கையை தீவிரமாக்கினால் மட்டுமே அந்நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பிணையநிதி வழங்க முடியும் என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் வற்புறுத்தி வருகிறார்.
இவரது சிக்கன நடவடிக்கையால் அவதிப்படும் கிரேக்கரும், சைப்ரஸ் நாட்டினரும் இவரை ஹிட்லராகச் சித்தரிக்கின்றனர். இது கண்டு ஜேர்மானியர் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஹிட்லரிடம் இருந்து வந்த சர்வாதிகார மனப்போக்கு இவரிடமும் இருப்பதாக அந்த இரு நாட்டு மக்களும் கருதுகின்றனர்.
கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளின் தெருக்களில் ஹிட்லர் மீசையுடன் மெர்கெல் முகம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தத் தெருக்களின் வழியே அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக மக்கள் ஊர்வலம் நடத்தினர்.
கிரேக்கரும், சைப்ரசும் செலவை குறைக்காவிட்டால் நிதி நெருக்கடியில் இருந்து மீள முயலாது என்று மெர்கெல் மற்றும் மற்ற பணக்கார நாடுகளும் நம்புகின்றது.
கிரேக்கர், சைப்ரஸ் விமர்சன படங்கள் குறித்து ஜேர்மானியரிடம் கருத்துக் கேட்டபோது 79 சதவீதம் பேர் இந்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாக ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக