4/4/13

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின ,,,


பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் வடகிழக்கே உள்ள கடலில் 38 கி.மீ. ஆழத்தில் இன்று காலை 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என்றும் அமெரிக்க புவியியல் வானிலை‌ மையம் இத்தகவலை தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக