9/8/13

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்**


இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக