17/8/13

யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி!



 யாழ்.ஏ-9 வீதி நாவற்குழிப் பகுதியில் இன்று காலை வேக்கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் வீதியினை விட்டு விலகி தடம் புரண்டடுள்ளது.
மேற்படிச் விபத்துச் சம்பவத்திற்கு உள்ளான பிக்கப் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளபோதும் பிக்கப் வானத்தினை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார்.

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் நாவற்குழிப் பாலத்தின் வழுக்கும் தன்மை காரணமாக நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று மேலும் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக