26/6/13

மெதுவாக சாலையை கடந்தவருக்கு அபராதம்:??


அவுஸ்திரேலியாவில் மெதுவாக சாலையை கடந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஜேம்ஸ் கிளாசென்(வயது 33) என்பவர், கடந்தாண்டு மார்ச் மாதம் அடிலெய்டு வந்தார்.
அங்குள்ள சாலையை மெதுவாக கடந்ததாக பொலிசார் ஜேம்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று அடிலெய்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற வழக்கை பதிவு செய்ததற்காக பொலிசாரை கண்டித்த நீதிபதி, இவர் என்ன தவறு செய்து விட்டார்? இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
உடனே வழக்கை வாபஸ் பெற்று கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும் சாலையை மெதுவாக கடந்த குற்றத்திற்காக ஜேம்சுக்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக