23/2/13

கனடாவில் பனிச்சரிவில் சிக்கிய மூவரில் ஒருவர் மரணம்


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில் மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைப்பகுதியில் ஏற்படும் இந்த பனிச்சரிவை தடுப்பதற்கு குவிந்திருந்த பனியை அகற்றினால் மட்டுமே அங்கு மக்கள் தமது அன்றாடப்பணிகளை நடத்தமுடியும்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக