29/7/13

தந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு - பெல்மதுளை சம்பவம்

பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தில் 65 வயதுடைய ஒருவர் தீயில் எரிந்து இறந்தமை சம்பந்தமாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. ஜே. சிங்கோ (வயது 65) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சனிக்கிழமை தீ மூட்டி எரிந்து இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ தினத்தன்று வாடகைக்கு...

18/7/13

பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

26 மாத குழந்தை ஒன்றை கொலை செய்ததாக டொரண்டோவில் குழந்தையின் தாயாரும் அவருடைய வாழ்க்கைத்துணைவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.Marleny Cruz என்ற 25 வயது பெண்ணும், Joel France என்ற 36 வயது ஆண் ஒருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் Marleny Cruz அவர்களின் 26 மாத குழந்தையும் இருந்தது. அந்த குழந்தைக்கு Joel France தந்தை அல்ல. இருவரும் குழந்தையை சரியாக கவனிக்காமல் அவரவர் வேலையை மட்டும் செய்து வந்துள்ளனர். திடீரென...

5/7/13

நீரோடையில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் பலி

கண்டியிலிருந்து கெக்கிரவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, தம்புள்ளைப் பிரதேசத்தின் நீரோடை ஒன்றில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வி காயமடைந்துமுள்ளார். கெகிராவ ரனஜயபுர பாதுகாப்புப் படை குடியேற்றப் பகுதியில் வசிக்கும் சுனந்த பிரேமதிலக என்ற 35 வயதுடைய கடற்படை அதிகாரியே விபத்தில் மரணித்துள்ளார். தம்புள்ள பன்னம்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த புதல்வி, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

4/7/13

காமலீலை புரிந்த அல்கொய்தா தலைவர்

 யேமனில் கொல்லப்பட்ட அல் கொய்தா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய சென்றபோது ஆயிரக்கணக்கான டொலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம்...

3/7/13

இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு

பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தால் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு மேற்படிப்பை தொடருவதற்கு உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தலா ஒரு மாணவிக்கு ரூபா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உயர்தரத்திற்கு தேவையாக புத்தகங்கள் அடங்கிய பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த  நிகழ்விற்கு வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி தேவராணி நவரத்தினம் அவர்கள்...

வாயைப் பிளக்க வைத்த ஸ்மார்ட் கை கடிகாரம்

  அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன. எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர்  தயாரித்துள்ளனர். குறித்த ஸ்மார்ட் கடிகாரம் 'அண்ட்ரோய்ட்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம்...