9/2/13

ஏலத்திற்கு வரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர்ச்சிலின்


பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஏலம் விடப்பட உள்ளது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு நாவல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். மேலும், கடந்த 1953ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் எழுதிய கவிதை ஒன்று பிரிட்டனில் ஏலம் விடப்பட உள்ளது. கடந்த, 1898ல் ராணுவத்தில் பணிபுரிந்த போது அவர் எழுதிய கவிதை 12 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. வரும், ஏப்ரலில் ஏலத்துக்கு வரும் இக்கவிதை இரண்டு பக்கத்துக்கு எழுதப்பட்டு சர்ச்சிலால் கையொப்பமிடப்பட்டிருக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக