28/9/13

கதிர்காம தேவாலயத்துக்கு பூட்டு 2 ஆம் திகதி வரை


கதிர்காம தேவாலயம் நாளை பகல் பூஜையின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
இதனை கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையில் விகாராதிபதி மற்றும் ஊவா வெல்லச பீடாதிபதி கலாநிதி அளுத்வெவ சோரத நாயக்க தேரர் காலமானதை அடுத்தே தேவாலயம் மூடப்படவுள்ளது.

20/9/13

மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்


எந்நாளும் மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்
 தோல்வியை மட்டும் வெல்லவேண்டுமென்று நினையுங்கள்

16/9/13

நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 

மத்தியகிழக்கில் தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர்.

சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ளோரில் 1 ஆண் மற்றும் 2 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொடை மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு  அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மற்றையோருக்கு பணம் வழங்கி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

10/9/13

இவ்வளவு தூசியும் கண்ணுக்குள் ?

ஒரு மனுஷனுக்கு கண்ணுக்குள்ள இவ்வளவு தூசியும், அழுக்கும் இருக்குமா ? அதை நாம் நம்ப முடியாத முறையில் வெளியே எடுக்கும் இந்த பாட்டியின் திறமை அபாரம் ஆனா பாட்டி எந்த ஊருன்னு தான் தெரியவில்லை!

ஊருன்னு தான் தெரியவில்லை!

9/9/13

பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் 10பேர்



தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது:

கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாலமானது, தேயிலை மடுவத்தை அண்மித்து உள்ளமையினால், அதில் வரிசையாக சென்றே சம்பள நிலுவை, தேயிலை தூள் என்பவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். கோப்பி பயிற்செய்கை காலத்தில் அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இரும்பு தூண்கள் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளன.
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் தேயிலைத் தூள் பக்கற்றுகள் வாங்குவதற்காக பாலத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயங்களுக்கு உள்ளாகிய 10ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை லிந்துல பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்

3/9/13

அதிமுகவில் இணைந்த பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி


பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர்.
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்துள்ளார்.