11/11/13

காதலின் தண்டனை....


காதலின் தண்டனை
இறைவனின் தண்டனை
உன்னை காதலித்தது
காதலின் தண்டனை
உன்னை நான்
பிரிந்தது....!
காதலின் மறைவிடம்
கனவுதான் -அதில்
கூட வரமறுக்கிறாய்...!
நீ தந்த ரோஜாவில்
ஒவ்வொரு முள்ளும்
ரோஜாவால் வரவில்லை
உன்னால் வந்தது....!

28/10/13

தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில்


தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர்  நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.

ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன்.

சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள். தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன.

இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன். தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகனை உறவினர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.

தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது. ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் உயிரற்ற உடல் கிடைத்தது. ஈழத் தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர்

சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

23/10/13

வித்தியாச நடனம் நிகழ்வில் பார்வையாளர்களை கவர்ந்த "


 
கனடியத் தமிழர் மத்தியில் நடத்தப்படும் நிகழ்வு எதுவாயினும் இசை , நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமையான ஒன்று தான். இதுவரை நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலுமே நம் பாரம்பரிய நடனமான பரத

நாட்டியத்திற்கும் , தமிழ் திரையுலகப் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த முறையைத் தவிர்த்து முழுமையான வர்த்தகத் திருவிழாவாக க்டந்த ஆண்டு நடைபெற்ற " Taste Of Online marketing " நிகழ்வில் இணைய

சந்தைப்படுத்துதல் குறித்து நிரோதினி பரராஜசிங்கம் மாணவர்களின் வித்தியாசமான நடனம் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இணைய விளம்பர யுக்தியில் இறங்கியுள்ள முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் , யூ-ரியூப் , கூகிள் ஆகிய அனைத்தும் தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் என்ற குடையின் கீழ் வருவது போன்று சித்தரிக்கப்பட்டு இதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகளுடன் நடனமாடினர்

 நாட்டிய நிகழ்விற்கென பிரத்யேக இசையமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமூட்டுவதாய் அமைந்தது. மொத்தத்தில் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தது இந்நாட்டிய நிகழ்வு.

18/10/13

கடைக்கு சிசுவின் சடலத்துடன் வந்த இளம்பெண்


அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பையிலிருந்து துர்நாற்றம் வரவே, பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, ஒரு பெண்ணின் பையில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.

அந்தப் பெண்களில் ஒருவர், ஒருநாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும், அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா? என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 

3/10/13

நாம்உண்ணும்உணவால் உண்டாகும் உடல் மாற்றம்


   உணவு 35 வயதாகும் உங்களைப் பார்த்து யாராவது ‘உங்களுக்கென்ன 40 வயசிருக்குமா’ எனக் கேட்டால் எப்படிப் பதறிப் போவீர்கள்? உண்மையான வயதை நிரூபிக்க எப்படியெல்லாம் தவிப்பீர்கள்? ‘என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே…’ என எத்தனை நாள்கள் தூக்கமின்றி மாய்ந்து போவீர்கள்? அதே நியாயம்தானே உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும்..? 8 வயதுப் பெண்குழந்தை 12 வயதுக்கான வளர்ச்சியுடன்

நின்றால்? 10 வயது ஆண் குழந்தை, பூனைமுடி மீசையுடன் நெடுநெடுவென உயர்ந்து நின்றால்? ‘அவ அப்படியே அவங்கப்பாவை மாதிரி… அதான் கிடுகிடுன்னு வளர்ந்துட்டா’ என்றும், ‘ஆம்பிளைப் பசங்க இப்படித்தான்… சீக்கிரம் வளர்ந்துடுதுங்க’ என்றும் ஏன் சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்?
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ரொம்பவே பாவம்! பின்னே… பிறந்தது

 முதல் 12 வயது வரை அனுபவிக்க வேண்டிய மழலைப்பருவத்தை வெகு சீக்கிரம் தொலைத்துவிட்டு, வேக வேகமாக பதின்ம வயதுக்குள் தள்ளப்படுகிற அவர்கள் பாவம்தானே? மழலையைத் தொலைத்துவிட்டு, மளமளவென அதிகரிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக்காரணம் அவர்களது உணவுப்பழக்கம்! ஊட்டத்தின் அடிப்படையில் உணவுகளைத் தேர்ந்தெடுக்காமல், சுவையின் அடிப்படையில் சாப்பிட்டுப் பழகியதன் விளைவு!

13 வயதின் தொடக்கத்தைத்தான் டீன் ஏஜ் என்கிறோம். இன்றோ பெண் குழந்தைகளும் சரி, ஆண் குழந்தைகளும் சரி, அதற்கு முன்பாகவே டீன் ஏஜின் மாறுதல்களை உணர்கிறார்கள். பெண் குழந்தைகள் 8, 9 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கோ 10 வயதுக்கு முன்பே குரல் உடைகிறது… முகப்பரு வருகிறது… மீசை அரும்புகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும், ஆண் பிள்ளைகளுக்கு ஆன்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும்

கொடுப்பதன்பிரதிபலன்கள்தான் எல்லாம்.  25 வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு 35 அல்லது 37 வயதாகும் போது, 10 வயதில் மகனோ, மகளோ இருப்பார்கள். 35க்குப் பிறகு பல பெற்றோருக்கும் உணர்வு நரம்புகள் பலவீனமடைகின்றன. செத்துப்போன நாக்கு, காரசாரமாகக் கேட்கிறது. தமது தேவைக்காக அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர்,

அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன

.சரி… இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? உணவுமுறை மாற்றம் மட்டுமே! காலை உணவுக்கு வாரம் இருமுறை வெறும் பழங்களைக் கொடுத்துப் பழக்குங்கள். மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்து, பருப்பு மற்றும் பழம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரவு உணவு 8 மணிக்குள் முடியட்டும். அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா

சேர்த்தரைத்த சட்னி கட்டாயம் இடம் பெறட்டும். இரவில் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை! உங்கள் குழந்தை சராசரியைவிடக் குறைவான எடையுடன் இருந்தால் மட்டுமே பால் தரலாம். சாதாரண எடை இருந்தால் பால் தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே கொடுங்கள். 90 சதவிகிதம் சைவ

உணவாகவே இருக்கட்டும். நிறைய தண்ணீர் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாளொன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பிள்ளைகளுக்கு துரித உணவு மோகம் குறைவது நிச்சயம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீர் இன்னும் உன்னதம். கரிசலாங்கண்ணிக் கீரை அடை, உணவுப் பொடி, சிவப்பு அவல் உப்புமா இவை
குழந்தைளுக்கு ,அவசியம்

அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர், அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். இதனால் பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன.

கேரள மக்கள் கல்வியறிவிலும் கலைத்திறன்களிலும் முன்னணி வகிக்க, அவர்கள் தினசரி எடுத்துக்கொள்கிற சீரகத் தண்ணீரும் ஒரு வகையில் காரணம். நுட்ப உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை மேம்படுத்தும் சக்தி அதற்கு உண்டு என்றால் நம்புவீர்களா? பிஞ்சிலே பழுக்க வைக்கிற பாவச் செயலை உணர்ந்து, இனியாவது குழந்தைகளுக்கு முழுமையான மழலைப் பருவத்தை அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கொடுங்கள் பெற்றோர்களே..!
 
 
 

28/9/13

கதிர்காம தேவாலயத்துக்கு பூட்டு 2 ஆம் திகதி வரை


கதிர்காம தேவாலயம் நாளை பகல் பூஜையின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
இதனை கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையில் விகாராதிபதி மற்றும் ஊவா வெல்லச பீடாதிபதி கலாநிதி அளுத்வெவ சோரத நாயக்க தேரர் காலமானதை அடுத்தே தேவாலயம் மூடப்படவுள்ளது.

20/9/13

மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்


எந்நாளும் மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்
 தோல்வியை மட்டும் வெல்லவேண்டுமென்று நினையுங்கள்

16/9/13

நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 

மத்தியகிழக்கில் தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர்.

சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ளோரில் 1 ஆண் மற்றும் 2 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொடை மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு  அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மற்றையோருக்கு பணம் வழங்கி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

10/9/13

இவ்வளவு தூசியும் கண்ணுக்குள் ?

ஒரு மனுஷனுக்கு கண்ணுக்குள்ள இவ்வளவு தூசியும், அழுக்கும் இருக்குமா ? அதை நாம் நம்ப முடியாத முறையில் வெளியே எடுக்கும் இந்த பாட்டியின் திறமை அபாரம் ஆனா பாட்டி எந்த ஊருன்னு தான் தெரியவில்லை!

ஊருன்னு தான் தெரியவில்லை!

9/9/13

பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் 10பேர்



தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது:

கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாலமானது, தேயிலை மடுவத்தை அண்மித்து உள்ளமையினால், அதில் வரிசையாக சென்றே சம்பள நிலுவை, தேயிலை தூள் என்பவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். கோப்பி பயிற்செய்கை காலத்தில் அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இரும்பு தூண்கள் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளன.
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் தேயிலைத் தூள் பக்கற்றுகள் வாங்குவதற்காக பாலத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயங்களுக்கு உள்ளாகிய 10ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை லிந்துல பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்

3/9/13

அதிமுகவில் இணைந்த பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி


பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர்.
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்துள்ளார்.

29/8/13

காளி கோயிலில் மிருக பலிக்கு தடை!- நீதிமன்றம்??


இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது.
தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான சட்டம் மீறப்படுவதாகக் கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான பொதுச் சட்டம் இதனால் மீறப்படுவதாக தீர்ப்பளித்தது.
எந்தவொரு சமயத்தை பின்பற்றுவதற்கு நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாகக் கூறிய நீதிபதி சிசிர டீ ஆப்ரு, ஆனால், அதற்காக பொதுச்சட்டங்களை மீறமுடியாது என்று கூறினார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து ஆராய்வதாக ஆலயத்தின் சார்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்

28/8/13

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்
சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது.
சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.
வொஷிங்டன் போஸ்டின் மெக்ஸ் பிஸ்ஸரே இக்காணொளியை முதற்தடவையாக கண்டுபிடித்துள்ளார்.
தற்போது இக்காணொளியானது பல இலட்சக்கணக்கான தடவை பார்க்கப்பட்டுள்ளது
{காணொளி,}

23/8/13

இலவச அழைப்புக்களை பேஸ்புக் மூலமாக மேற்கொள்வதற்கு


முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்.facebook-front_1796837b
இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் iPhone – இல் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை நிறுவியிருத்தல் வேண்டும்.

21/8/13

கன்னித்தன்மை மாணவிகளுக்கு பரிசோதனை: எதிர்ப்பு


இந்தோனேஷியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு பயிலும் மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது மனித உரிமைகளுக்கு எதிரானது என பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
 

20/8/13

மேலோங்கும் உடல் உறுப்பு ஊழல் ஜேர்மனில் !!


ஜேர்மன் நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் ஊழலானது மேலோங்கி காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஜேர்மனில் உள்ள கோட்டிங்கன்(Göttingen) பல்கலைக்கழக மருத்துவமனையில் இதுவரை 11 உடல் உறுப்பு ஊழலானது நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனையின் அனிமேன்(Aiman O) என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தவறான உடல் உறுப்பு பாகங்களை வைத்து அறுவை சிகிச்சை செய்த குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதுவரை தானம் செய்யப்பட்ட கல்லீரலை உறுப்புகள் பொருந்தாத நோயாளிகளுக்கு பொருத்தியதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது ஜேர்மனியில் 12,000 நோயாளிகள் உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் உடல் உறுப்பு தானத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடந்து வருவதால் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையானது ஜேர்மன் நாட்டில் குறைந்து வருகிறது

18/8/13

இப்படியும் ஒரு கொடூரமா? கடைக்கு சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்


தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்கு சென்ற மனைவியை, கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த கொடைடாட் என்பவருக்கு மனவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவ தினத்தன்று கணவர் கொடைடாட்டுக்கு சொல்லாமல் கடைக்கு சென்றுள்ளார் அவரது மனைவி.
இவர் வெளியில் சென்றுள்ளதை கொடைடாட்டின் நணபர்கள் பார்த்து தெரிவித்து விட்டனர்.
உடனடியாக வீடுக்கு வந்த கொடைடாட், ஆத்திரம் தாங்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றுள்ளான்.
இதில் சம்பவ இடத்திலேயே மனைவி துடிதுடிக்க பலியானார்.
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், கொடைடாட்டை தேடி வருகின்றனர்
 

17/8/13

யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி!



 யாழ்.ஏ-9 வீதி நாவற்குழிப் பகுதியில் இன்று காலை வேக்கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் வீதியினை விட்டு விலகி தடம் புரண்டடுள்ளது.
மேற்படிச் விபத்துச் சம்பவத்திற்கு உள்ளான பிக்கப் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளபோதும் பிக்கப் வானத்தினை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார்.

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் நாவற்குழிப் பாலத்தின் வழுக்கும் தன்மை காரணமாக நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று மேலும் தெரியவந்துள்ளது.

15/8/13

பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில்


கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­ல­கப்­ பி­ரிவில் வினா­சி­யோடை கிரா­மத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் பலாத்­கா­ரத்­திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக சென்றவேளையில் சீருடை அணிந்த இருவர் தமது முகங்களை துணியால் மறைத்துக்கட்டியிருந்த நிலையில் பெண் மீது பலாத்காரம் புரிந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்ட இப் பெண் இரத்தப் போக்கு கட்டுப்படாத நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

14/8/13

இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரியப் பிரசை??



கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெற்றுள்ளீர்கள் எனக்கூறி பலரிடம்  இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந் நைஜீரியப் பிரசை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரைத் திருமணம் முடித்து வசித்து வந்த நிலையில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலரதும் தொலைபேசி இலக்கங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வெளிநாட்டு, அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் உங்களுக்கு ஒரு கோடி  ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தான் இலங்கைக்கு வெளிநாட்டு லொத்தர் சபையால் நியமிக்கப்பட்ட  முகவர் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தை இவர் மோசடி செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் இதேபோல் முன்னரும் பலரை மோசடி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்

9/8/13

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்**


இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்

5/8/13

வெள்ளப்பெருக்கு: முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்


ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 24 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு வர படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நீதுகுமாரி தெரிவித்துள்ளார்
 

29/7/13

தந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு - பெல்மதுளை சம்பவம்


பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தில் 65 வயதுடைய ஒருவர் தீயில் எரிந்து இறந்தமை சம்பந்தமாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. ஜே. சிங்கோ (வயது 65) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சனிக்கிழமை தீ மூட்டி எரிந்து இறந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ தினத்தன்று வாடகைக்கு தங்கியிருந்தவருக்கும் இறந்தவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டு இரும்பினால் வாடகைக்கு தங்கியிருந்தவரை இறந்தவரை தாக்கியுள்ளார்.

வாடகைக்கு தங்கியிருந்தவர் பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதற்கிடையில் தீ மூட்டி எரிந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

18/7/13

பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை


26 மாத குழந்தை ஒன்றை கொலை செய்ததாக டொரண்டோவில் குழந்தையின் தாயாரும் அவருடைய வாழ்க்கைத்துணைவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Marleny Cruz என்ற 25 வயது பெண்ணும், Joel France என்ற 36 வயது ஆண் ஒருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் Marleny Cruz அவர்களின் 26 மாத குழந்தையும் இருந்தது. அந்த குழந்தைக்கு Joel France தந்தை அல்ல.
இருவரும் குழந்தையை சரியாக கவனிக்காமல் அவரவர் வேலையை மட்டும் செய்து வந்துள்ளனர். திடீரென குழந்தையின் முகம் நீல நிறத்தில் மாறியதால் பதட்டமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
ஆனாலும் சிகிச்சைக்கு பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து விசாரணை செய்த பொலிசார், குழந்தையின் மரணத்திற்கு அவர்கள் இருவரின் கவனக்குறைவே காரணம் என்பதை அறிந்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜூலை 23ம் திகதி வரை அவர்கள் இருவரையும் காவலில் வைக்கும்படி டொரண்டோ நிதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை மீண்டும் ஓகஸ்ட் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
 

5/7/13

நீரோடையில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் பலி



கண்டியிலிருந்து கெக்கிரவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, தம்புள்ளைப் பிரதேசத்தின் நீரோடை ஒன்றில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வி காயமடைந்துமுள்ளார்.
கெகிராவ ரனஜயபுர பாதுகாப்புப் படை குடியேற்றப் பகுதியில் வசிக்கும் சுனந்த பிரேமதிலக என்ற 35 வயதுடைய கடற்படை அதிகாரியே விபத்தில் மரணித்துள்ளார்.
தம்புள்ள பன்னம்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த புதல்வி, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

4/7/13

காமலீலை புரிந்த அல்கொய்தா தலைவர்

 
யேமனில் கொல்லப்பட்ட அல் கொய்தா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய சென்றபோது ஆயிரக்கணக்கான டொலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம் முதல் எஃப்.பி.ஐ. இன் கண்காணிப்பில் இருந்தார்.
அப்போது அவர் ஆயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்து விலை மாதுகளுடன் உல்லாசகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2002ம் ஆண்டு அவர் பென்டகனில் பேசவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்பு கூட வொஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் 400 டொலர்கள் கொடுத்து ஒரு விலை மாதுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
வெர்ஜினியாவில் உள்ள பள்ளிவாசலொன்றில் இமாமாக இருந்த அவர் வாஷிங்டனில் விலை மாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவர் வெளிப்படையாக அல் கொய்தாவுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் விலைமாதுகளுடன் இருப்பது குறித்து பல்வேறு அரச முகவர் நிலையங்கள் அவரிடம் விசாரணை நடத்தின
 

3/7/13

இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு


பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தால் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு மேற்படிப்பை தொடருவதற்கு உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தலா ஒரு மாணவிக்கு ரூபா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உயர்தரத்திற்கு தேவையாக புத்தகங்கள் அடங்கிய பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த  நிகழ்விற்கு வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி தேவராணி நவரத்தினம் அவர்கள் தலைமை வகித்தார். இதில் பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம சுவாமி சித்துருபானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளான கா.கீர்த்தனா, மு.வெண்ணிலா, இ.சுரேகா, சி.கோகிலா, ச.டிலோஜி ஆகியோருக்கு அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்தார்

வாயைப் பிளக்க வைத்த ஸ்மார்ட் கை கடிகாரம்

 
அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன.
எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை.
இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர்  தயாரித்துள்ளனர்.
குறித்த ஸ்மார்ட் கடிகாரம் 'அண்ட்ரோய்ட்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.
இரண்டு அங்கு திரையைக் கொண்டுள்ளதுடன் 2 மெகாபிக்ஸல் கெமராவினை கொண்டுள்ளது.
புளூடூத், ஜி.பி.எஸ், 256 எம்.பி. ரெம்,  வை- பை, 8 மற்றும் 16 ஜிபி மெமரி என பல வசதிகளை இக்கைக்கடிகாரம் கொண்டுள்ளது.
இதன் விலை 150 பவுஸ்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், சிம் அட்டயை உபயோகிப்பதன் மூலம் இதனூடாக குறுந்தகவல் அனுப்புதல், அழைப்பினை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.
இந்திய மாணவர்களின் தயாரிப்பிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

26/6/13

மெதுவாக சாலையை கடந்தவருக்கு அபராதம்:??


அவுஸ்திரேலியாவில் மெதுவாக சாலையை கடந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஜேம்ஸ் கிளாசென்(வயது 33) என்பவர், கடந்தாண்டு மார்ச் மாதம் அடிலெய்டு வந்தார்.
அங்குள்ள சாலையை மெதுவாக கடந்ததாக பொலிசார் ஜேம்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று அடிலெய்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற வழக்கை பதிவு செய்ததற்காக பொலிசாரை கண்டித்த நீதிபதி, இவர் என்ன தவறு செய்து விட்டார்? இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
உடனே வழக்கை வாபஸ் பெற்று கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும் சாலையை மெதுவாக கடந்த குற்றத்திற்காக ஜேம்சுக்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
 

16/6/13

மணிவண்ணன் மரணம்



திரையுலகம் அதிர்ச்சி! இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா.
பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம்.
ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.
மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்

15/6/13

மணிவண்ணன் மரணம்: நாம் தமிழர் அஞ்சலி

பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50வது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏவை இயக்கிய இயக்குனர் மணிவண்ணன் இன்று இயற்கை எய்தினார்.
 தமிழ்சினிமாவின் தலைசிறந்த ஒரு கோபுரம் சாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அதுமிகையாது. ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைப்படங்கள் இயக்க வருபவர்களுக்கும் என்றும் சாயாத கலங்கரைவிளக்கக் கோபுரங்களாத் திகழும் என்பதில் ஐயமில்லை. பாரதிராஜாவின் பலபடங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றிய இயக்குனர் மணிவண்ணனை தனது கொடிபறக்குது படம் மூலம் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் இமயம் பாரதிராஜா

10/6/13

செக்ஸ் தொழிலாளியின் மகளுக்கு கிடைத்த அதிர் ஷ்டம்


மும்பையை சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்தவர் ஸ்வேதா(வயது 18).
இவரின் தாத்தா பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார்.
இதில் விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
எனினும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் குழந்தையை பெற்றெடுத்து நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின் பாலியல் தொழிலையும் கைவிட்டார்.
இருப்பினும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில் ஸ்வேதாவும் பல ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று ஓராண்டு காலம் படிப்பை தொடராமல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும், நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும் சென்று அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இவரது சிறந்த பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள போர்டு கல்லூரி கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும் ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் படி ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைப்பதுடன், 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டையும் இலவசமாக வழங்கியுள்ளது
 

3/6/13

யார்மனதையும் புண் படுத்துவதற்கு இல்லை

மிருகம் காட்டுக்குள்ளே மனிதத்தன்மையுடன் மனிதன் நாட்டுக்குள்ளேமிருகத்தன்மையுடன்விலங்குகள் விலங்குகளுக்கு குழிபறிப்பதில்லை மனிதன் மனிதனுக்கு குழிபறிக்கிறன் ,விலங்குகளே வழிவிடுங்கள் மனிதன் காட்டுக்குள்ளே வருகிறான்,{காணொளி} ,

23/5/13

பூவின் மருத்துவ குணங்கள்:-


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
 எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

22/5/13

கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய


நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரை நிர்வாண நிலையில், மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது,குறித்த பெண்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்,.
  குளியாப்பிட்டிய கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம் விதிக்கப்பட்டவர்களாவர்.
  கடற்கரையிலிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடிய இந்தப் பெண்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
  பிரதிவாதிகள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்

21/5/13

ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி


 கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது.
கடந்த வியாழன் அன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒருவன் அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறான்.
வான்கூவரைச் சேர்ந்த பிராட் டீரிங் என்பவர் இந்தக் கொலைகாரனின் துப்பாக்கிக் குண்டுக்குப் கடந்தவாரம் பலியானார்.
காவல் பணியாளரைப் போல உடை உடுத்தி வியாழன் பிற்பகல் துப்பாக்கி ஏந்தியபடி சிலர் எஸ்காசு நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தனர்.
டீரிங்கையும்(42) இன்னும் இரண்டு ஆண்களையும், ஒரு பெண்ணையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டனர்.
டீரிங்கை நோக்கி கொலைகாரன் மூன்றுமுறை சுட்டதில் அவர் மயங்கிச் சாய்ந்தார்.
டக்ளஸ் ஸ்மித் என்ற துப்பறியும் நிபுணர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கொலையுண்ட டீரிங் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது கொலைகாரனின் கண்களை உறுத்தியிருக்கலாம் என்றார்.
டீரிங்கிடம் மூன்று பெரிய கார்கள் இருந்ததாகவும் அவர் மிகவும் ஆடம்பரமாகத் தன்னைக் காட்டிக் கொண்டதாகவும் கூறிய ஸ்மித், அவர் வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் கொள்ளைக்காரர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்றார்.
வியாழக்கிழமை நடந்த டீரிங்கின் படுகொலையை எடுத்துக்காட்டிய கனடா அரசு கோஸ்டா ரிச்சாவில் பெருகிவரும் வன்முறையில் இருந்து தப்பிக்க அங்கு போவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
 

15/5/13

இரட்டை கொலை: பொலிசார் தேடுதல்

  
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார்.
கொலை நடைபெற்றபொழுது அக்காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் எவருக்கும் இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பெற்றோரோடு வாழ முடியாத சிறுவர்கள் இந்த இல்லத்தில் அன்போடு வளர்க்கப்படுகிறார்கள். இங்கு ஒரு குடும்பச் சூழ்நிலை நிலவுவதால் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறார்கள்.
கொலைச் செய்தவரும் மிகவும் நாகரிகமாக மனிதர், குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்வார், தோட்டத்தில் அவர்களோடு உற்சாகமாக விளையாடுவார் என்று காப்பகத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைகளை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
 

9/5/13

மருத்துவமனையில் உள்ள இம்ரான் கான் தேர்தலில்


 பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் பிரச்சாரத்தின் போது மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார்.
கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால் மருத்துவமனையில் இருந்தபடியே, தொலைக்காட்சி மூலம், பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில், இம்ரான் கானுக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், அவர் நாளை மறுநாள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் ஆறும்வரை அசையாமல் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் அவர் வாக்களிப்பதற்காக மியான்வாலி நகருக்கு பயணம் செய்வது சாத்தியமல்ல. 11-ம் தேதிக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார். அவர் பூரண குணமடைவார்.
ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்
 

7/5/13

விபத்தில் பலி எண்ணிக்கை 700 ஆக அதிகரிப்பு:


வங்க தேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த மாதம் 24ம் திகதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுமார் 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து இதுவரை 700 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிக பிரேதங்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

4/5/13

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைந்தது,,

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 688 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2586-க்கு விற்கிறது.
 வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 135 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 45 ஆயிரத்து 690 ஆகவும், ஒரு கிராம் ரூ. 48.90 ஆகவும் உள்ளது

2/5/13

சிறிலங்காசெல்லும் ஜேர்மனிய சிங்கங்கள்,,,,

ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்காவுக்கு மூன்று சிங்கங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.இம்மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் இந்த சிங்கங்கள் சிறிலங்காவுக்கு தருவிக்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 ஜேர்மனியிலிருந்து இரண்டு பெண் சிங்கங்களும், தென் கொரியாவிலிருந்து ஆண் சிங்கமொன்றும் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
 இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 6 சிங்கங்கள் காணப்படுவதுடன், அவை மிகவும் வயதான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 கடந்த 20 வருட காலப்பகுதியில் தேசிய மிருகக்காட்சி சாலைக்கு வேறு நாடுகளிடமிருந்து சிங்கங்கள் கிடைக்கவில்லை என்றும் மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார்
 

30/4/13

விண்வெளி சூரிய தகட்டில் விழுந்த ஓட்டை:?


அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து கடந்த 1998ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
பூமியில் இருந்து சுமார் 370 கி.மீற்றர் தொலைவில் சுற்றுவட்டத்தில் சுற்றி வருகின்ற இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார்.
சமீபத்தில் விண்வெளி மையத்தை சுற்றி விண்வெளி நடை(ஸ்பேஸ் வாக்) மேற்கொண்டபோது, இந்த ஓட்டையை கண்டுபிடித்தாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டை விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
விண்ணில் சுற்றி வருகின்ற எறிகல் மோதியதால் இந்த ஓட்டை விழுந்திருக்கலாம் என்றும், முக்கிய பாகங்களில் எறிகல் ஊடுருவியிருக்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விண்கற்களால் இந்த ஓட்டை ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும், மனிதர்களால் கைவிடப்பட்ட விண்வெளி குப்பைகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அரிசோனா பல்கலைக் கழக கோள்கள் ஆராய்ச்சியாளர் ஜிம் ஸ்காட்டி தெரிவித்துள்ளார்
 

28/4/13

குரு பெயர்ச்சி பலன்கள்! 2013 – 2014

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 வைகாசி மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப இராசியில் இருந்து, மிதுன இராசிக்கு சஞ்சாரம் செய்ய போகிறார். மிதுனத்தில் இருந்து துலா இராசி, தனுசு இராசி, கும்ப இராசியை, 5-7-9-ம் பார்வையாக பார்க்க இருக்கிறார்.

...இதனால், தற்போது துலாவில் இருக்கும் இரண்டு முக்கிய கிரகங்களான சனி மற்றும் இராகுவின் தீமைகளை சற்று குறைத்து, மக்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார்.

ஐ.டி. துறை, இரும்பு தொழில், வாசனை திரவியங்கள், ரியல் எஸ்டேட், எழுது பொருள் தொழில், ஜவுளி துறை, கட்டட உபகரணங்கள் ஆகிய இவை அனைத்தும் லாபம் பெரும்.

அன்னிய நாடுகள் வீண் விவகாரத்திற்கு வந்தாலும் அடங்கி விடுவர்.

பெரும் மழை, இயற்கை சீற்றங்கள் வர வாய்ப்புள்ளது. அரசியல் ஈடுபாடு உடையவர்களுக்கு சற்று சிரமமான நேரம். பிரச்னைகளை சமாளிக்க பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மை, தீமைகளை கலந்தே செய்வார்.

குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 31.5.2013 அன்று வெள்ளிக்கிழமை, ரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுனத்திற்கு போகும் குரு, 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்களை தருவார் என்று பார்ப்போம்…

16/4/13

தென்கொரியா மீது தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்


வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.  இது, வட கொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. வட கொரியா அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோபத்தின் கனல் வெளிப்பட்டது.
”தென் கொரியாவில் உள்ள பொம்மலாட்ட அதிகார வர்க்கத்தின் சார்பில் எங்களை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட பேரணி கண்டிக்கத்தக்கது. இந்த நேரத்தில் இருந்து, எவ்வித முன் எச்சரிக்கையும் விடுக்காமல், தென் கொரியா மீது எப்போது வேண்டுமானாலும் வட கொரியா அதிரடியாக தாக்குதல் நடத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சித்து வரும் வேளையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது