28/3/13

விபச்சார விடுதி முற்றுகை: மாணவர்கள் உட்பட

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ். பிரதேச செயலக அதிகாரிகளால் இன்று (28) இடம்பெற்ற இம்முற்றுகையின் போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குவதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

கைதானவர்களில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் அடங்குவர்தாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களது பல்கலைக்கழக அடையாள அட்டை யாழ். பிரதேச செயலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணும் அடங்குவதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.
 

24/3/13

கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ?


பெர்ன் நீதிமன்றம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற தாய்லாந்துப் பெண்ணுக்கு ஆட்கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்காக ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இந்தப்பெண் பல சுவிஸ் நகரங்களில் ஐம்பது பேரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு பொலிசார் இந்தப்பெண்ணை ஜேர்மனியில் வைத்துக் கைது செய்துள்ளனர். அப்பொழுது அவளிடம் கடத்திக் கொண்டு வரப்பட்ட பெண்களின் ஆவணங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பெண் பொலிசாரிடம் கூறுகையில், தானும் பலிகடா ஆக்கப்பட்டவள் என்று கூறியுள்ளார்.
இதனால் அவளது குற்றத்தின் தாக்கம் குறையாது என்று நீதிமன்றம் தெரிவித்து தற்பொழுது சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தாய்லாந்தில் கடும் வறுமையின் சூழலில் குடும்பங்கள் தங்கள் பெண்களைப் பாலியல் தொழில் செய்வதற்கான பணம் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்.
இப்பெண்கள் குறைந்த பட்சமாவது அறுபதினாயிரம் ஃபிராங்க் சம்பாதித்துத் தனது கடனைத் தீர்க்க வேண்டும் என்ற நிலையில் இவர்கள் விபசாரத் தொழில் செய்து கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
இந்த விபச்சார குழுவின் தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 1.8 மில்லியன் மூலமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

23/3/13

விமானியாக நடித்த முதியவர் கைது

தன்னை விமானி என அறிமுகப்படுத்தி ஏமாற்ற முயன்ற முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிலிப் ஜியானார்ட்(வயது 61). இவர் அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்திற்கு செல்லும் விமானத்தில் ஏறி, விமானியின் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.
அங்கு சென்று தன்னை விமானி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
அதன் பின் சந்தேகம் எழுந்து சோதனையிட்ட போது, அதற்கான ஆதாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதனையடுத்து பொலிசார் குறித்த முதியவரை கைது செய்தனர்
 

19/3/13

இசுலாமிய தீவிரவாதியாக மாறிய பிரான்ஸ் பொலிஸ்காரர்,.,



மாலித் தீவில் இசுலாமியவாதியாக வாழ்ந்து வரும் முன்னாள் பிரெஞ்சு பொலிஸ்காரர் டிஜமீல் என்பவர், ஜிஹாத் இயக்கத்தில் சேர்ந்து பிரான்சுக்கு எதிராக மாலியில் செயல்பட்டதால் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர் என்று ஊடகத் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது கைதான முன்னாள் பொலிஸ்காரரை குறித்து அவரது அக்கா கூறுகையில், என் தம்பி கிரினோபிள் என்ற ஊரில் குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றினார் என்றும் பின்னர் பொலிஸ் துறையை விட்டு விலகி அடிக்கடி பள்ளிவாசலுக்குப் போகத் தொடங்கினார் எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சிறிது காலம் சென்ற பின்னர் மூன்று குழந்தைகளோடு மனைவியை விவாகரத்துச் செய்து தாடி வளர்த்து கொண்டு அல்கொய்தாவில் சேரப்போவதாகக் கூறி வந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர், பிரான்ஸ் நாட்டுக்கு துரோகம் செய்ததற்கான பலனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் கோபமாகக் கூறியுள்ளார்.
கடந்த சில மாதமாக பிரான்ஸ் நாட்டிற்குள்ளேயே சில இசுலாமிய தீவிரவாதிகள் உருவாகி வருகின்றனர் என்றும் இவர்களை வன்மையாக ஒடுக்குவதற்கு பிரான்ஸ் அரசு பல முயற்சிகளை செய்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
 

சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் சிக்கினர்


கனடா நாட்டு சிறையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் தப்பிய கைதிகள் மீண்டும் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் மான்ட்ரியல் நகர சிறையில் பெஞ்சமின் ஹூடோன்(வயது 36) டேனி புரொவிங்கல்(வயது 33) உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளநிலையில் சிறையிலிருந்து தப்பிக்க திட்டமிட்ட டேனி, தன் நண்பர்களை தொடர்பு கொண்டார்.
அதன்படி அவரது நண்பர்கள் கடந்த 17ம் திகதி, தனியார் சுற்றுலா ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தினர்.
விமானியை துப்பாக்கிமுனையில் மிரட்டி ஹெலிகொப்டரை சிறைக்கு மேலே பறக்குமாறு கட்டளையிட்டனர்.
சிறையில் தயாராய் இருந்த டேனி, பெஞ்சமினையும் தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கிய பெஞ்சமின் சிறையிலிருந்து தப்ப சம்மதித்தார். திட்டமிட்ட படி, ஹெலிகொப்டரிலிருந்து வீசப்பட்ட கயிறு ஏணியை பிடித்து ஏறி அவர்கள் தப்பி சென்றனர்.
பகல் நேரத்தில் பலர் முன்னிலையில் நடந்த இந்த துணிகர நிகழ்ச்சியை பார்த்த மற்ற கைதிகளும் பொலிசாரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், அருகில் உள்ள செயின்-ஜெரோம் நகரில் மறைந்திருந்த கைதிகளை கைது செய்தனர்
 

18/3/13

சிறைக்கைதிகள் ஹெலிகொப்டர் மூலம் தப்பி ஓட்டம்:

.
கனடாவிலுள்ள கியூபெக் நகரத்தில் செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்த இரு கைதிகள் சிறைக் கண்காணிப்பாளரை நாடகமாடி ஏமாற்றிவிட்டு ஹெலிகொப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதிகள் இருவரும், சிறை வளாகத்தில் வந்திறங்கிய ஹெலிகொப்டர் மூலம் தப்பிச்சென்றது தெரியவந்ததுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பொலிசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
மேலும் அந்த ஹெலிகொப்டரை மடக்கி பிடித்த பொலிசார் அதன் விமானியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

17/3/13

தேள்கள்: உயிரி ஆயுதமாகபயன்படுத்தியிருக்கலாம் என ??





 யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தேள் வகைகளை உயிரி ஆயுதமாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தேள் வகைகளை இந்திய அமைதி காக்கும் படையினர் கொண்டு வந்திருக்கலாம் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரட்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
1991ஆம் ஆண்டில் முதல் தடவையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைத் தேள் கொட்டியதனால் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

தம்பதிகளில் தலைகளை வெட்டி குளிர்சாதனப்


சீனாவின் நிர்வாக நகரமான ஹாங் காங்கின் தாய் கோக் சூயி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த சாவோ விங்-கி மற்றும் அவரது மனைவி சியு யுவெட்-யீ ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை.இந்நிலையில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அந்த வயது முதிர்ந்த தம்பதியரின் தலைகள் அவர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்தது தெரியவந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த அந்த தலைகளை பொலீஸார் கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து நடத்திய சோதனையில், குடியிருப்பின் மற்ற பகுதிகளில் அந்த தம்பதியரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களை கொலை செய்ய பயன்படுத்திய கத்திகளும் கைப்பற்றப்பட்டன. உடலின் ஒரு சில பாகங்களைக் காணவில்லை.
நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர கொலை தொடர்பாக பொலீஸார் வழக்குப்பதிவு செய்து, அந்த தம்பதியரின் 29 வயது மகன் மற்றும், 35 வயதான மற்றொரு நபரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

16/3/13

ஆளில்லா "வானில்" மோதாமல் தப்பித்த விமானம்


டொரொண்ட்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் எச்சரிக்கையை மீறி விமானத்தை இறக்கிய விமானியின் மீது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
திங்கட்கிழமை இரவு 11.39க்கு ஏர் கனடா 178 என்ற ஜெட் விமானம் 97 பயணிகளுடன் தரையிறங்கியது.
அப்போது விமானிகளிடம் தற்போது தரையிறங்க வேண்டாம் என்று இரண்டுமுறை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அது யாருக்கோ விடப்பட்ட எச்சரிக்கையாகக் கருதிய விமானிகள் தமது விமானத்தைத் தரையில் இறக்கினர்.
அப்போது ஒருதளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவர் தனது வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது தான் வந்த வான் உள்ளே ஆளில்லாத நிலையில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். 60 மீற்றர் தொலைவிற்கு வான் போய்விட்டது.
ஓட்டுநர் ஒருவரும் இல்லாமல் வான் நகர்வதைக் கூறி தற்போது ஓடு தளத்தில் விமானத்தை இறக்க வேண்டாம் என்று எச்சரித்ததை ஜெட்விமானிகள் கருத்தில் கொள்ளாமல் விமானத்தை இறக்கியபோது நூலிழையில் அந்த விமானம் வானில் மோதாமல் தப்பியது.
அதிர்ஷ்டவசமாக 97 பயணிகளும் உயிர்பிழைத்தனர்
 

15/3/13

வளர்ந்த நாடுகளின் டாப் 10 வரிசையிலிருந்து கனடா ,,,


கடந்த 1990ம் ஆண்டு முதல், வளர்ந்த நாடுகளின் வரிசையில் பத்து இடங்களுக்குள் இருந்து வந்த கனடா இன்று பதினோராம் இடத்துக்கு இறங்கிவிட்டது என்று ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதாரம், கல்வி, வருமானம் ஆகிய துறைகளில் கனடா 11ம் இடத்திலும், ஆண் பெண் பேதம் பார்ப்பதில் 18வது இடத்திலும் உள்ளது என்று ஐ.நாவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐ.நாவின் மேம்பாட்டுத் திட்டம் தெற்கின் எழுச்சி என்ற தலைப்புடன் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலக அளவில் தென்பகுதியிலுள்ள நாடுகளில் பொருளாதார எழுச்சியை விளக்கியுள்ளது.
மேலும் ஐ.நா மேம்பாட்டுத் திட்டம் வளர்ந்துவரும் நாடுகளின் முக்கிய மூன்று அம்சங்களை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முதலாவதாக தென்பகுதியிலுள்ள நாடுகள் தங்களின் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்குத் தேவையான மேம்பாட்டுக் கொள்கைகளை வகுக்கும்பொழுது அவற்றின் பயன்பாடு மற்றும் செயற்பாடு குறித்து அதிகம் கவனம் செலுத்துகிறது.
இரண்டாவதாக இந்தத் தெற்கு நாடுகள் உலகச் சந்தைக்கு பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்தன. மூன்றாவதாக சமூக நலத் திட்டங்களில் முதலீடு செய்கின்றன.
எனவே தெற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கும் வகையில் சா்வேதச நிறுவனங்கள் தனது விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று ஐ.நா வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

13/3/13

வர்ண மழையுடன் வீழ்ந்த பொருட்கள் வேற்றுக்கிரக வாசிகளுடையது!–


இலங்கையில் கடந்த வருடத்தில் பல்வேறு வர்ணங்களில் பெய்த மழையுடன் கிடைத்த அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரகவாசிகளுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் தொடர்பில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளரான ஜெமி வில்லிஸ் இலங்கையில் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்
தற்போது இந்த பொருட்கள் உலகத்துக்கு வெளியில் வெளிக்கிரகங்களை சேர்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றித் திரிவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா, பதுளை, மொனராகலை, பொலனறுவை போன்ற பகுதிகளில் இவ்வாறு பல்வேறு வர்ணங்களில் மழை பெய்தன இது தொடர்பில்
தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நில அதிர்வு சம்பவங்களின்போதும் இந்த பொருட்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஞ்சா போதையில் இளைஞர்கள் வன்முறை


யெவர்டோன் லெஸ் லெய்ன்ஸ்(Yverdon-les-Bains) என்ற இடத்திலுள்ள மெக்டொனால்டின் உணவகம் ஓன்றின் முன்னர் ஆக்கிரமித்திருந்த கஞ்சா புகைத்த இளைஞர்களை அந்த இடத்தை விட்டுப் போகுமாறு அதட்டிய காவல்காரரை அவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.
டிரான்செஸ்கோ பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் இந்த உணவகத்தின் வாயிற் காவலராக பணியாற்றி வருகிறார்.
உணவகத்தின் முன்னர் 15 முதல் 20 வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைத்துகொண்டு இருப்பதைக் கண்டு காவல்காரா் அவர்களை விரட்டியுள்ளார்.
அவர்களோ போதை வெறியில் அவரைத் தாக்கத் தொடங்கி அவர் முகத்திலேயே குத்தியதில் பற்கன் உடைந்து, முகம் வீங்கி, உதடு கிழிந்து, ரத்தம் கொட்டி, மூக்கு உடைந்துள்ளது.
ரத்தக் கசிவு அதிகமானதால் அவர் மயங்கி விழுந்த பின்னரும் கூட அவர்கள் அவரை கால்களால் உதைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொலிசாரிடம் தகவல் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி கொண்டுயிருக்கிறார்கள்
 

12/3/13

வீட்டை விற்பதற்காக விவாகரத்து செய்யும் சீனர்கள்


வீடு விற்பனையின் போது விதிக்கப்படும் அதிக வரியை தவிர்க்க சீன தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.
சீனாவில், வீடு விற்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக அமலில் இருந்தாலும் கடுமையாக பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு சீன அரசு  கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.
திருமணமாகாத தனி நபர்களுக்கு இச்சட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிவிதிப்பில் இருந்து தப்ப சீன தம்பதிகள் விவாகரத்து செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த வாரத்தில், ஒரே நாளில், 53 தம்பதிகளுக்கு ஷாங்காயில் உள்ள சாபே மாவட்ட திருமண அலுவலகம் விவாகரத்து வழங்கி சாதனை படைத்துள்ளது.
இது வழக்கமான நடைமுறை தான் என்றும் சட்டம் கடுமையாக உள்ளதால் மக்கள் விவாகரத்து செய்ய முடிவெடுக்கின்றனர் எனவும் ரியல் எஸ்டேட் வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வீடு விற்பனை செய்த பின்னர் அதே தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்துகொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

11/3/13

கோல்சஸ்டர் இளைஞர் கொலையில் இருவர் கைது

பிரிட்டனில் உள்ள கோல்சஸ்டா்(Colchester) என்ற ஊரில் தாமஸ் பிரிட்டன்(Thomas Brittain) என்ற பாடலாசிரியரை வீட்டிற்குள் திடீரென புகுந்த யாரோ கத்தியால் பலமுறை குத்திக்கொலை செய்துவிட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக இலண்டனைச் சேர்ந்த ஜேக் ஹம்மர்ஸ்ட்டோன்(Jack Hummerstone) மற்றும் ஆண்டிரி வெல்லா(Andre Vella) என்ற இரண்டு இளைஞர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் படங்களையும் எஸ்ஸெக்ஸ் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த இளைஞர்களின் வாக்குமூலத்தில் மூலமாக தாமஸ் பிரிட்டனின் கொலை விபரம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிசார் ஊடகத்தினரிடம் கருத்து வெளியிடுகையில், நேற்று அதிகாலை 1.45 மணியளவில் பாரக்சைட் குவார்ட்டரிலுள்ள ஒரு நண்பர் வீட்டில் பாடலாசிரியர் பிரிட்டன் இருந்தபொழுது இருவரும் உள்ளே புகுந்துள்ளனர்.
ஒருவர் துப்பாக்கியைக் காட்டி பிரிட்டனை மிரட்டியுள்ளார் என்றும் அடுத்தவர் தன் கையில் இருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இக்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

9/3/13

இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர??


மிதமிஞ்சிய ஷாப்பிங் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்ட முடியாததால் சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை பறிமுதல் செய்யும்படி பாரிஸ் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த இளவரசர் நையப் பின் அப்துல் அசிஸ் அல் ஸௌதின் மனைவியாக இருந்த மஹா அல்-சுதைரி பாரிஸ் நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் நிறைய ஆடம்பர பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்துருக்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு நான்கு நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி லாவில் ஒரு தளத்தையே எடுத்து 60 பணியாளர்களுடன் ஆறு மாதங்களுக்கு தங்கி இருந்துள்ளார்.
ஆனால் அதற்கான தொகையான ஐம்பது கோடி ரூபாயைக் சவுதியின் அரசர் கட்ட மறுத்தவுடன் பாதுகாப்பு கோரி வேறு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அவருக்கு கடன் கொடுத்த ஆறு நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் முடிவில் இளவரசி பதிவு செய்திருந்த மூன்று சேமிப்பகத்தை திறந்து அதனுள் இருக்கும் ஆடம்பர பொருட்களை விற்று கடனை அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எல்லா பொருட்களையும் மதிப்பீடு செய்த பின்னர் ஏலத்தின் மூலம் விற்க வேண்டும் என்பதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனே பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

8/3/13

மொபைல் போன்களுக்கு நிகராக செயல்படும் கார்கண்ணாடி

மொபைல் போன்களுக்கு நிகராக செயல்படும் கார்கண்ணாடி
விண்ட்ஸ் ஸ்கிரீன் எனப்படும் காரின் கண்ணாடிகளில் கைப்பேசியிலிருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் GPS தொடர்பான தகவல்களை பிம்பமாக தெரியப்படுத்தும் தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
இத் தொழில்நுட்பமானது ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சி ஒன்றில் முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
Harman's Head UpDisplay System (HUD) எனப்படும் இத் தொழில்நுட்பத்தின் மூலம் தொடுதிரைத் தொழில்நுட்பத்திற்கு நிகரான அனுபவம் கிடைக்கப் பெறுவதோடு பாதுகாப்பானதாகவும் காணப்படுகின்றது.

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
 அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
 ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
 நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.
 அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
 ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.
 "இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.
 உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.
 அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
 அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
 எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:
 நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.
 மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
 எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்

7/3/13

இளம்பெண்ணைக் கற்பழித்த எட்டுப்பேர் கைது



பிரிட்டன் அருகே ஹெர்ட்ஃபோர்ட்ஷியரில்(Hertfordshire) பதினாறு வயது நிரம்பாத பெண்ணை கற்பழித்த எட்டு நபர்களை பொலிசார் புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவாளிகளைத் தேடிய பொலிசார் நியுஹாம்(Newham), ரெட்பிரிட்ஜ்(Redbridge), ஹேவரிங்( Havering) மற்றும் ஹெர்ட்ஃபோர்டு ஷயர் போன்ற இடங்களில் அலைந்து இவர்களைப் பிடித்துள்ளனர்.
குற்றம் சுமத்தப்பட்ட எட்டுப் பேரும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்பொழுது இந்த எட்டுப் பேரும் கிழக்கு இலண்டன் காவல்நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் பாலியல் கொடுமைகளுக்கான ஆளானவர்கள் வேறு எவரேனும் இருந்தால் அவர்கள் உடனே காவல்நிலையத்துக்கு வந்து முறையிடலாம் என்று தலைமை ஆய்வாளர் ஆடம் லோவ்(Adam Lowe)தெரிவித்துள்ளார்.
 

5/3/13

நோபல் பரிசு பரிந்துரையில் மலாலா,,,


பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி, தலிபன்களால் தலையில் சுடப்பட்டு, மரணத்துடன் போராடி உயிர் பிழைத்தவர் சிறுமி மலாலா.
பள்ளிக்கூட சிறுமியான இவர், பெண் கல்விக்கு ஆதரவாக போராடியமை உலக நாடுகளை கவர்ந்தது.
இந்நிலையில் மலாலாவின் பெயர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு கொலம்பியா மற்றும் மியான்மர் தலைவர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சமுதாய தொண்டிற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் பெயரும் அந்த ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

4/3/13

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தொடர் ?


வயிற்று வலி காரணமாக பிரித்தானிய ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராணி இரண்டாம் எலிசபெத்(வயது 87), இவருக்கு கடந்த வெள்ளியன்று(1ம் திகதி) திடீர் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். பின்னர் லண்டனில் உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டொக்டர்கள் பரிசோதித்து வந்ததில் வாயு கோளாறால் அவதியுற்றுவருவதாக தெரியவந்தது. தற்போது தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் எலிசபெத் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

2/3/13

பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக அமெரிக்க



ஜப்பானில் கூட்டு கடற்படைப் பயிற்சிக்காக சென்றிருந்த அமெரிக்கா கடற்படை வீரர்களான கிரிஸ்டோபர் டேனியேல் பிரவுனிங் மற்றும் ஸ்கைலர் டோசியர் வாக்கர் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒக்கினாவா மாவட்ட தலைநகரான நாஹா-வில் ஜப்பானிய இளம்பெண் ஒருவரை கற்பழித்ததாக புகார் எழுந்தது.
இச்சம்பவத்தை கண்டித்து ஜப்பானில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அமெரிக்க வீரர்களை ஜப்பான் போலீஸாரிடம் ஒப்படைக்க முதலில் மறுத்த அமெரிக்கா கடற்படை அதிகாரிகள், பின்னர் ஜப்பான் அரசின் உத்தரவுக்கு இணங்கினர்.

இதனையடுத்து, கற்பழிப்பு குற்றம்  சாட்டப்பட்ட இருவர் மீதும் நாஹா மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்து வழக்கிம் நீதிபதி தீர்ப்பை நேற்று  வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் மற்றும் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.