31/1/13

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு விசாரணையின் போது கற்பழிப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி அரசு மருத்துவமனைகள் பற்றி புகார் கூறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம், டெல்லி மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் கற்பழிப்பு மற்றும் விபத்தில் சிக்குவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உரிய உத்தரவுகளை டெல்லி மாநில அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

30/1/13

சுவாமிவிவேகானன் தரின் அருள் மொழி ..,

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே...

நீ சாதிக்கப் பிறந்தவன்...

துணிந்து நில், எதையும் வெல்...! ????????,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
munivஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்nm9898
அமுதே...! தமிழே...! அழகிய மொழியே...! எனதுயிரே...! தமிழரிடம் தமிழில் பேசுவோம்...! தமிழை நேசிப்போம்...! தமிழில் எழுதுவோம்...!

29/1/13

பிரிட்டனில் கடும் மழை: புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரச்னை

பிரிட்டனில் மழை கொட்டும் என்பதால் அரசு இனியும் ரோமானியா பல்கேரியா நாடுகளிலிருந்து புகலிடம் நாடி வந்தவர்களின் கால அவகாசத்தை நீட்டிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இனியும் தங்க விரும்புவோர் இன்னும் ஆறுமாதப் பிழைப்புக்கான வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இங்கு வந்து மூன்று மாதத்துக்குள் வேலை தேடியிருக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. போலந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்த பின்பு அங்கியிருந்து இங்கிலாந்து நாட்டிற்கும் வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிறது. இவர்களால் இடநெருக்கடி ஏற்படத் தொடங்கிவிட்டது என்று கூறினார் உள்ளாட்சி மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் எரிக் பிக்கிள்ஸ்(Eric Pickles). போலாந்து, செக்குடியரசு, லாத்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிக ஒன்றியத்துடன் இணைந்து பின்பு ஏறத்தாழ மூன்று லட்சம் பேர் பிரிட்டனுக்குள் வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் பிக்கிள்ஸ். மேலும் ரோமேனியா பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 29 மில்லியன் பேர் பிரிட்டனின் தங்கியுள்ளனர். அதனால் இனியும் இவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க இயலாது என்று பிரிட்டன் அரவு உறுதியாகத் தெரிவித்துவிட்டது

27/1/13

விஸ்வரூபம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது கல்வீச்சு

8765கேரளாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது ஒரு கும்பல் கல்வீச்சு நடத்தியது விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு 2 வார தடை விதித்துள்ளது. ஆனால் கேரளாவில் கடந்த 25ம் திகதி படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் உள்ளது. பெங்களூரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆனால் படத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இல்லை. ஆனாலும் எதிர்ப்புகளுக்கு இடையே படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொல்லத்தில் உள்ள பார்த்தா மூவி ஹவுஸ் என்ற தியேட்டரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. ரிலீஸான உடனேயே பார்த்தா மூவி ஹவுஸில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் சில மணி நேரத்தில் திடீர் என்று அங்கு வந்த கும்பல் ஒன்று தியேட்டர் மீது கல்வீசித் தாக்கியது. பார்த்தா மூவி ஹவுஸ் தாக்கப்பட்டதையடுத்து அதற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

வக்கிர கணவன்... வதைப்பட்ட மனைவி

48 வயது நபருக்குத் திருமணம் செய்து​கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்​களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்​களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விஷயங்களைக் கொண்ட அந்தப் புகாரில், 'ஏழு பெண்களைத் திருமணம் செய்த என் கணவன், என்னை ஏமாற்றி எட்டாவதாகத் திருமணம் செய்திருக்​கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருப்​பதால், இந்த விவகாரம் தீயாகக் தகிக்கிறது. காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்தவர் தான்தோன்.பாஸ்கரன். பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற இவருடைய குடும்பத்தில் பலர் பிரான்ஸில் தொழில் செய்கிறார்கள். பாஸ்கரன் மட்டும் இங்கேயே தங்கி ரியல் எஸ்டேட் மற்றும் ஃபைனான்ஸ் தொழில் செய்கிறார். பிரான்ஸில் இருக்கும் பலருக்கும் அவர்களின் பணத்தை இங்கு முதலீடு செய்ய உதவுவார். அத னால், வசதிக்குக் குறைவு இல்லை. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இவருக்குத் திருமணம் ஆகி மனைவியாக வருபவர்கள் அனைவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள். லேட்டஸ்ட்டாக, கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் - வசந்தி தம்பதியின் மூத்த மகள் லெட்சுமியைத் திருமணம் செய்தார். அவர்தான் இப்போது அடுக்கடுக்கடுக்கான குற்றச்​சாட்டுக்​களோடு காவல் நிலையத்துக்கு சென்று இருக்கிறார். பெருந்தோட்டத்தில் இருந்த லெட்சுமியைச் சந்தித்தோம். ''நான் 10-வது வரை படிச்சு இருக்கேன். எங்க வீட்டில் என் னையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். அதில் நான்தான் மூத்தவள். 'முதல் மனைவி புற்றுநோயால் இறந்​துட்டாங்க... மாப்பிள்ளை உங்க குடும்பத்துக்கும் உதவியா இருப்பார்’னு அவரைப்பத்தி புரோக்கர் சொல்​லவும், குடும்பத்து நிலையை மனசுல வெச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. கல்யாணம் ஆகி பத்து நாள்கூட நான் நிம்மதியா இல்லைங்க. ஒவ்​வொரு நாளும் எனக்கு நரக வேதனைதான். ராத்திரி பகல்னு பார்க்காம எப்ப தோணுதோ, அப்ப எல்லாம் உடலுறவுக்கு கூப்பிடுவார். வலி தாங்க முடியாமக் கத்தினாலும் விடமாட்டார். சில நாட்களில் என்னையும் பிராந்தி குடிக்கச் சொல்லி வற்புறுத்துவார். மறுத்தால் கடுமையா அடிச்சு வாயில் வலுக்கட்டாயமா ஊத்தி ​விடுவார். உடம்பில் அந்தரங்கமான இடங்களில் சிகரெட்டால் சூடு வச்சு அலறுவதைப் பார்த்து ரசிப்பார். இப்படி அவர் தனிமையில் என்கிட்ட செய்யும் கொடுமைகளைக்கூட பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கிட்டேன். ஆனா, தன்னோட நண்பர்களைக் கூட்டிட்டு ​வந்து அவர்களோடு சேர்ந்து குடிச்ச பிறகு, அவங்களுக்கு முன்னாடி நடனம் ஆடச் சொல்வார். மறுத்​தால், அடிச்சு உதைச்சு உடைகளைக் கிழிச்சு நிர்வாணமாக நடனம் ஆடச் சொல்வார். அடியாலும் அவர் வலுக்​கட்டாயமாக ஊற்றிய மதுவாலும், எப்படியோ ஆடி அவர்களிடம் இருந்து தப்பிப்பேன். நண்பர்​கள் போன பிறகு அவருக்கு ஒரு வெறி வந்துவிடும். அதற்குப் பிறகு விடியும் வரை என்னை பாடாய்ப்படுத்துவார். கடந்த 20-ம் தேதி, வீட்டில் எண்ணெய் சட்டி வெச்சு மீன் பொரிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ வீட்டுக்கு வந்த​வர், 'உடனே வா’னு உடலுறவுக்கு அழைச்சார். 'இதோ, மீனைப் பொரிச்சுட்டு வர்றேன்’னு சொன்னேன். அவ்வளவு​தான்... எண்ணெய்யைத் தூக்கி என் மேல வீசினார். சட்டுனு விலகிட்டதால, முகத்திலும் உடலிலும் சில இடங்களில் மட்டும் எண்ணெய் பட்டதோடு தப்பிச்​சேன். வெளியே போனவர் களிம்பு வாங்கிக்கிட்டு வந்து கொடுத்துட்டு, கதவை வெளிப்பக்கம் பூட்டிட்டுப் போயிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், அவர் ஏற்கெனவே ஏழு பெண்களைத் திருமணம் செஞ்சு இருக்கிறார்னும் அவங்க எல்லாரும் இவரோட டார்ச்சர் தாங்க முடியாம பிரிஞ்சு​போயிட்டாங்கன்னும் சொன்னாங்க. அதைப்பத்தி அவர்கிட்ட கேட்டப்ப, என்னை அடிச்சு உதைச்சார். கை வளையல்கள் உடைஞ்சு காயம் ஏற்பட்டது. அவர் குளிக்கப் போகும்போது தப்பிச்சு என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். அம்மா, அப்பாகிட்ட நடந்த கொடுமை​களை எல்லாம் சொல்லி, அவங்களோட வந்து காரைக்கால் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன்'' என்றார் அழுகையோடு. லெட்சுமி சொல்லி இருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாஸ்கரனின் தம்பி சண்முகத்திடம் பேசினோம். ''அனைத்தும் முழுக்க முழுக்கப் பொய்யான குற்றச்​சாட்டுகள். அவருக்கு இதற்கு முன்னர் மூன்று திருமணங்​கள் நடந்து இருக்கின்றன. மூன்றிலும் சுய விருப்பத்தோடு மனைவிகள் விவாகரத்து பெற்றனர். அதை விவரமாகச் சொல்லித்தான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்தார். நன்றாக இருந்த பெண் திடீரென்று இப்படிப்பட்ட குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறார். இதன் பின்னணியில் அண்ணனின் தொழில் எதிரிகள் இருப்பதாகத் தெரிகிறது. அண்ணன் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டி இருக்கும் லெட்சுமி மீதும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்'' என்றார். லெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் தான்தோன் ​பாஸ்கரனை அழைத்து விசாரித்த காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. லலிதா அவரை கைது செய்தார். ''ஏமாற்றித் திருமணம் செய்தது, வன்கொடுமை செய்தது, சித்ரவதை செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பதால் கைது செய்தோம். லெட்சுமி சொல்லி இருக்கும் மற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து இப்போதுதான் விசாரணையைத் தொடங்கி இருக்கிறோம்'' என்றார். விசாரணையை விரைவில் முடித்து, உண்மைகளை போலீஸார் வெளிக்கொண்டு வரட்டும்!

26/1/13

நடனமாடிய வாலிபர் கைது: பெண் பயணிகள் அதிர்ச்சி

சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் நிர்வாண நடனம் ஆடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு கேரளா எர்ணாகுளம் அருகே குறித்த இரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்தார். நள்ளிரவு என்பதாலும் பலர் தூக்கத்தில் இருந்ததாலும் உடனடியாக யாரும் இதை கவனிக்கவில்லை. பின் அந்த வாலிபர் நிர்வாண நிலையிலேயே நடனம் ஆடினார். அந்த நேரத்தில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்த பெண் பயணி ஒருவர், இவரின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார். அவரின் சப்தத்தை கேட்டு விழித்தெழுத்த மற்ற பயணிகள் இவரின் அலங்கோல நிலையைப் பார்த்து திகைப்படைந்தனர். உடன் ஆண் பயணிகள் சிலர் அந்த வாலிபரை பிடித்து ஆடைகளை உடுத்தச் சொல்லி அமர வைத்தனர். ரயில் குருவாயூர் சென்றடைந்ததும் அவரை பொலிசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், குறித்த அந்த வாலிபர் கொல்லம் நகரை அடுத்த கொட்டாரக்கராவை சேர்ந்த பிஜு என்பவர் என தெரியவந்தது. அவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது

அரசியலில் காலடி பதிக்க ஆயத்தமாகும் பேஸ்புக்

சூக்கர்பேர்க்999பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் அரசியலில் நுழைவதற்கான ஆயத்த பணிகளில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூ ஜேர்ஸ்னி ஆளுனர் கிரிஸ் கிரிஸ்டிக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்வொன்றை மார்க் சூக்கர்பேர்க் அடுத்தமாதம் நடத்தவுள்ளாராம். கலிபோர்னியோவில் தனது பாலோ அல்டோ வீட்டியிலேயே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார் சூக்கர்பேர்க். ஆளுனராக மறுபடியும் தேர்தலில் களமிறங்கும் குடியரசு கட்சியின் கிரிஸ் கிரிஸ்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய நிதிதிரட்டும் நடவடிக்கையே மார்க் சூக்கர்பேர்க் நடத்தவுள்ளார். கிரிஸ் கிரிஸ்டி அடுத்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என ஏற்கனவே ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், மார்க் சூக்கர்பேர்கின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது

பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம்

மின்னல் தாக்கியதில் இன்ஜினில் தீப்பிடித்ததனால், பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலிருந்து, இஸ்மிர் என்ற நகருக்கு 114 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியது. இதில் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததையடுத்து இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பற்றிய விமானத்திலிருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்

வெனிசூலா நாட்டு சிறைச்சாலையில் பயங்கர மோதல்;

வெனிசூலாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஊரிபானா சிறையில் நடைபெற்ற மோதலில் 50 பேர் பலியானார்கள் என தகவல் தெரிவிக்கின்றது. சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இந்த மோதல் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. மோதலின்போது, துப்பாக்கி சூடும் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மருத்துவமனை அதிகாரி ரூய் மெடீனா கூறும்போது, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றார்

இருப்புத் தொகையை திருப்பிக் கொடுத்தது சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகள் 1998ம் ஆண்டில் உருவாக்கிய பெருந்துயர மீட்பு நிதியான 1.3 பில்லியன் டொலரை, அத்துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டோருக்குத் திரும்பிக் கொடுத்துவிட்டதாக நீதிபதி எட்வர்ட் கோர்மன் தெரிவித்தார். இந்த நிதி தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டதால் மொத்தமாக அந்த நிதியை அனைவருக்கும் திருப்பித்தந்துவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தொகையான 1.25 பில்லியன் டொலருடன் வட்டியும் சேர்த்து 1.3 பில்லியன் டொலர் திருப்பியளிக்கப்பட்டது. "1998ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த நிதியை 2001 முதல் வங்கிகள் திருப்பித்தரத் தொடங்கின. இப்போது தான் இந்த நெடும்பணி நிறைவடைந்தது" என்று கோர்மன் கூறினார். இதற்கான மீட்பாணையம் அனைத்துப் பணமும் திருப்பியளிக்கப்பட்டதால் அலுவலகமே 2012ம் ஆண்டில் மூடப்பட்டுவிட்டதாக அறிவித்துவிட்டது. இத்தகவலை கோர்மன் சுவிஸ் ஜேர்மனி மொழியில் வெளிவரும் பத்திரிகைக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார். வங்கி ஆவணங்கள் இரண்டாம் உலகப் போரின்போது அழிந்து போனதால் பலருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்றார் கோர்மன். ஒருவரிடம் ஒரு வங்கி ஆவணம் கூடக் கிடையாது. பத்திரிகைச் செய்தி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு அவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சுவிஸ் வங்கிகள் தேவையின்றி பெருந்துயரத்தில் பிழைத்து மீண்டவர்களின் பணத்தை வைத்திருப்பதாகவும் அவர்களின் குடும்பத்தினரிடம் அந்தப் பணத்தைத் திருப்பித்தர வேண்டும் என்றும் அமெரிக்காவில் சுவிஸ் வங்கிகள் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக அவர்களின் பணத்தைத் திருப்பித் தர கிரெடிட் சுவிஸ் மற்றும் தேசிய வங்கி 1998ம் ஆண்டில் ஒரு மீட்பு நிதியை உருவாக்கியது. பணத்தைத் திருப்பித்தர வங்கிகள் இறந்து போன வங்கி வாடிக்கையாளர்களின் இறப்புச் சான்றிதழை வாரிசுதாரர்களிடம் கேட்டன. ஆனால் இது சாத்தியமில்லை என்பதால் கையில் இருக்கும் வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பணம் திருப்பி தரப்பட்டன. பெருந்துயர நிகழ்வில் ஜேர்மானியரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 452,000க்கும் அதிகமாகும் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

25/1/13

எம்மாணிக்க விநாயகரின்பக்திப்பாடல்

        வேன்டுவோர்ற்கு வேண்டும்வரம் அருளும் எம் மாணிக்க விநாயகரின் வினையாகநேவினைதீர் பவனே எனும்பக்தி பரவ வசமுட்டும்பக்திப்பாடல்