23/7/15

நெடுந்தீவு அரவிந்தின் மறுபடியும் ஒரு காதல்

மறுபடியும் ஒரு காதல்
கணவன் மனைவியாய்
பிரிவுகள் நேர்ந்தபின்
நினைவுகளை
ஒன்றுசேர்த்து
நிஜங்களை ஆராய்கையில்
சந்தேகம் தப்பென்று
என்னுகிறேன்.
கண்ணகியாய் இருந்த உன்னை காரிருளில்
தள்ளிவிட்டேன்
சந்தேகம் எனும் படுகுழிக்குள்
விழுந்தது என் மனம்
தூரமாய்ப்போனது
நம் உறவு.
மன்னித்து விடு என்னவளே.
காதலின்போது தோற்காத
நம் அன்பு
கல்யாணத்தின் பின் 
கறைபட்டுப்போனது
வெப்பத்தில் நொருங்கிய
கண்ணாடிபோல்
சுட்டுக்கொண்டே
உடைகிறது என் மனம்
மன்னித்துவிடு
உயிர்வரை இனித்தவளே.
மறுஜென்மம் தேவை
இல்லை நாம் மறுபடியும்
காதல் செய்வோம்
கணவன்,மனைவியாய்
இப்போதே இணைவோம்
மறுபடியும் வாழ்வோம்

ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>