20/5/15

ரதிமோகனின் அன்பு கொண்ட இதயம்

மெய்யன்பு
பொய்யாகலாம்
அழுகையும்
வலியும்
மெய்யாகலாம்….

இதயத்து வலிக்கு
தனிமை
நிவாரணம் தேடித்
தரலாம்..

தனிமைக்கு
எழுத்தாணி
துணை
சேர்க்கலாம்.
அதிகமான அன்பும்
அதிக உரிமையும்
பிரிவை தந்து
செல்லலாம்….

அதீத அன்பு
அதிக சோகம்
ஆழமாய்
நேசிக்காதே என
அறிவுரை உரைக்க..
இதயமிங்கு
தெளிவாகி
தெளித்து நின்றது
பன்னீரை
செந்நீரையல்ல.
ஆக்கம்: ரதிமோகன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக